ராமேஸ்வரம்: கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலய திருவிழா வரும் பிப். 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. பிப். 24ம் தேதி சிறப்பு திருப்பலி பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது. இரண்டு நாட்கள் நடைபெறும் திருவிழாவை முன்னிட்டு கச்சத்தீவில் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று இலங்கை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. கூட்டத்தில், கச்சத்தீவு திருவிழாவில் இந்தியா மற்றும் இலங்கையில் இருந்து தலா 4 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்க அனுமதிக்க முடிவு செய்யப்பட்டது.