மதுரை: மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 7ஆவது சுற்று முடிவில் 3 வீரர்கள் முதலிடத்தில் உள்ளனர். சிவகங்கை அபிசித்தர், குன்னத்தூர் திவாகர், கருப்பாயூரணி கார்த்திக் தலா 11 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்துள்ளனர். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 7வது சுற்று முடிவில் 573 காளைகள், 350 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். 183 காளைகள் பிடிபட்டன.