ராசிபுரம், ஜன. 11: வெண்ணந்தூர் ஒன்றியம், அலவாய்ப்பட்டி ஊராட்சியில் உள்ள ரேஷன் கடைகளில், தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ₹1000 ரொக்கம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஒன்றிய செயலாளர் துரைசாமி தலைமை வகித்து, கார்டுதாரர்களுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் துரைசாமி, ஒன்றிய பொருளாளர் பாலு, சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ரவீந்தர், கிளை செயலாளர்கள் இளைஞர் அணி அருள், மாணவர் அணி சசி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்
previous post