ஊட்டி, டிச. 23: ஊட்டி அருகேயுள்ள மஞ்சனக்கொரை பகுதியை சேர்ந்தவர் கூலிதொழிலாளி பிரசாந்த் (18). இவர் நேற்று முன்தினம் தனது டூவீலரில் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்ேபாது மத்திய பஸ் நிலையம் அருகே சாலையோரம் நிறுத்திவிட்டு சென்று சிறிது நேரத்திற்கு பிறகு வந்துள்ளார். அப்போது ஒருவர், இருசக்கர வாகனத்தை திருட முயற்சித்துள்ளார். அந்த நபரை கையும் களவுமாக பிடித்த பிரசாந்த், உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினரிடம் அந்த நபரை ஒப்படைத்தனர். விசாரணையில் அந்த நபர் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த பிரதிப்குமார் (32) என்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அவர் மீது ஊட்டி ஜி1 காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.