காஞ்சிபுரம்: சோமங்கலம் அருகே எருமையூர் பகுதியில் பிரபல ரவுடி மேத்யூ போலீசாரால் கைது செய்யப்பட்டார். ரவுடி மேத்யூ மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னை புறநகரில் தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்த புகாரில் மேத்யூவை தனிப்படை போலீஸ் கைது செய்தது.