சென்னை: கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 2 பேர் உள்ளிட்ட 6 வழக்கறிஞர்கள் தொழில்புரிய பார் கவுன்சில் தடை விதித்தது. கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட வழக்கறிஞர்கள் தெய்வக்கண்ணன், தியாகராஜன், ஆகியோர் தொழில்புரிய தடை விதிக்கபட்டுள்ளது. வழக்கு முடியும் வரை இருவரும் எந்த நீதிமன்றங்களிலும், தீர்ப்பாயங்களிலும் ஆஜராக பார் கவுன்சில் தடை விதித்துள்ளது. வேலையில் இருந்ததை மறைத்து வழக்கறிஞராக பதிவு செய்த ஸ்ரீதர், குற்ற வழக்கை மறைத்த வினோத்குமாருக்கும் தடை விதித்துள்ளது.