இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் மாஜி ராணுவ தளபதி குவாமர் பஜ்வாவின் நெருங்கிய உறவினர் முகமது சபீர். அவர் 14 உள்ளூர் வங்கிகள் மற்றும் 5 வெளிநாட்டு வங்கி கணக்குகளில் சந்தேகத்துக்கிடமாக ரூ.534 கோடி போட்டு வைத்திருப்பதாக பாக். விசாரணை அமைப்பான எப்.ஐ.ஏ கண்டறிந்தது. அதனையடுத்து, அவருக்கு நாளைக்குள்ளாக நேரில் ஆஜராகும்படி நேற்று சம்மன் அனுப்பியது. அவர் நேரில் வரும்போது அனைத்து விவரங்களை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.