சென்னை: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தமிழ்நாட்டுக்கு வெளியே செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. வெளிநாடு செல்ல உயர்நீதிமன்ற அனுமதியை ராஜேந்திர பாலாஜி பெற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஜேந்திர பாலாஜியின் ஜாமின் நிபந்தனைகளை தளர்த்திய நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர். ராஜேந்திர பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமினை மேலும் நீட்டித்து நீதிபதிகள் போபண்ணா, சுந்தரேஷ் அமர்வு உத்தரவிட்டது.