தூத்துக்குடி: சனாதனம் குறித்து நான் பேசியதில் எந்த தவறும் இல்லை என்றும் தொடர்ந்து சனாதனம் குறித்து பேசவேன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசுவதால் பலருக்கு வயித்தெரிச்சல் இருக்கும் என்பது தெரிந்தே தான் அதை பற்றி பேசினேன் என்கிறார் சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசும் போது அமைதியாக இருந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதவி விலக வேண்டும் என்ற பாஜக கேள்விக்கு பதிலளித்த அவர்; நான் பேசியதே தவறு இல்லை என்று சொல்லும் போது அமைச்சர் சேகர்பாபு ஏன் பதவி விலக வேண்டும் என பதிலடி கொடுத்தார்.
சனாதனத்தில் பெண்கள் அடிமையாக வைக்கப்பட்டிருந்ததாக தெரிவித்த உதயநிதி ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சியை பெண்களின் நலனுக்காக புதுமைப்பெண் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு அடிமைத்தனம் தவிர்க்கப்படுவதாக பெருமிதம் தெரிவித்தார். நான் பேசியது யூடியூபில் உள்ளது, எத்தனை வழக்குகள் வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம்; சமூக நீதிக்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சியே திமுக; மதத்திற்கு எதிராக நான் பேசவில்லை, மதத்தின் உள் இருக்கும் சாதிய பாகுபாடுகளை ஒழிக்க தான் பேசினேன் என்றும் கூறினார்.