குளித்தலை, செப்.3: கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த பெருமாள் கவுண்டம்பட்டியைச் சேர்ந்த முருகேசன் மகள் அய்யர்மலையில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் பிஏ முதலாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 30ம் தேதி அன்று வீட்டில் இருந்து கல்லூரிக்கு சென்று வருவதாக கூறி சென்றவர் கல்லூரி முடித்துவிட்டு வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. இது குறித்து மாணவியின் தாயார் குளித்தலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து மாயமான கல்லூரி மாணவி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.