டெல்லி: இந்திய நாட்டின் 140 கோடி மக்களையும் நவீன உளவுக் கருவிகள் மூலம் மோடி அரசு கண்காணிப்பது அம்பலமாகியுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த ஃபைனான்சியல் டைம்ஸ் என்ற பத்திரிகை, மோடி அரசின் உளவு திட்டத்தை அம்பலப்படுத்தியுள்ளது. இஸ்ரேலை சேர்ந்த காக்னைட், செப்டியர் போன்ற நிறுவனங்களிடம் இருந்து அதிநவீன உளவுக் கருவிகளை வாங்கியுள்ளது மோடி அரசு.