சென்னை: சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவு அளித்துள்ளார். தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றிய ஆலோசனைக் கூட்டத்தில் இறையன்பு அறிவுறுத்தியுள்ளார். நீர்நிலைகள் தொடர்ந்து தூர்வாரப்படுவதை உறுதி செய்ய வேண்டும் தலைமை செயலாளர் இறையன்பு கூறியுள்ளார்.