டெல்லி: மே 7-ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு முடிவுகள் வரும் 15ம் தேதி வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களும், தமிழகத்தில் 1 லட்சத்திற்கும் அதிகமானவர்களும் நீட் தேர்வு எழுதி உள்ளனர். நாடு முழுவதும் இளங்கலை மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு மே 7ம் தேதி நடைபெற்றது.