சென்னை: நாளை மறுநாள் 500 அரசு மருத்துவமனைகளை திறந்து வைக்க உள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் புதிதாக ஒரு பல் மருத்துவக் கல்லூரி அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் 500 மருத்துவமனைகளை திறந்தவுடன், மக்கள் சேவைக்கு தயாராகும். தமிழ்நாட்டில் காலியாக உள்ள மருத்துவ பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.