நீலகிரி: கோடை விடுமுறையையொட்டி உதகை பூங்காவிற்கு ஏப்ரல், மே-இல் மட்டும் 8.61லட்சம் பேர் வருகை தந்துள்ளனர். உதகை தாவரவியல் பூங்காவிற்கு 8.61லட்சம் பேர் வருகையின் மூலம் ரூ.4.73 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கோடை விடுமுறையை விட 1.27 லட்சம் சுற்றுலா பயணிகள் அதிகமாக வருகை தந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.