ஆந்திரா: திருப்பதியில் ரூ.40 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை கடத்தியதாக 2 தமிழர்கள் உட்பட 16 பேர் கைது செய்யப்பட்டனர். திருப்பதி செம்மரக்கடத்தல் தடுப்பு அதிரடிப்படை போலீசார் குழுவாக கடப்பா மாவட்டம் வாணிபெண்டா வனச்சரகத்திற்குட்பட்ட திப்பிரெட்டிபள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சிலர் தோளிலும், தலையிலும் செம்மரக்கட்டைகளை சுமந்து கொண்டு சென்று கொண்டுருந்தனர்.
அவர்களை சுற்றி வளைத்த போலீசார், அந்த பகுதியில் இருந்த மொத்தம் 14 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 17 செம்மரக் கட்டைகள், ஒரு சரக்கு ஆட்டோ, 2 மோட்டார் சைக்கிள்கள், பிடி இல்லாத 13 இரும்பு கோடாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. பிடிபட்டவர்கள் அனந்தபுரம் மாவட்டம் கதிரியை சேர்ந்த 14 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் திருவண்ணாமலை அன்னமய்யா மாவட்டம் மோளையனூர் கிராமத்தை சேர்ந்த சிவராஜ், குடத்தூர் கிராமத்தை சேர்ந்த சிவமணி ஆகியோரை கைது செய்து. அவர்களிடமிருந்து 6 செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்யப்பட்டது. இருவேறு வழக்குகளில் மொத்தம் 16 கடத்தல்காரர்களிடமிருந்து ரூ. 40 லட்சம் மதிப்புள்ள செம்மரங்கள் பறிமுதல் செய்தனர்.