சென்னை: மெரினாவில் இரவு 10 மணிக்கு மேல் மக்களை போலீசார் எப்படி துன்புறுத்துகின்றனர்? ஆதாரம் உள்ளதா? என ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. மெரினாவில் இரவில் நேரக்கட்டுப்பாடு விதிப்பதை எதிர்த்த ஜலீல் என்பவரின் வழக்கில் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கோடை வெயிலின் உக்கிரம் தணிக்க மெரினாவுக்கு வரும் மக்களை துன்புறுத்தக் கூடாது என ஜலீல் மனுவில் தெரிவித்துள்ளார்.