தஞ்சை: அரசு மதுபான கூடத்தில் மது வாங்கி குடித்து இருவர் உயிரிழந்த விவகாரத்தில் 4வது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர். மதுவில் சயனைடு கலந்து இருந்தது தொடர்பாக கொலையா அல்லது தற்கொலையா எனவும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். கடந்த ஞாயிறன்று பாரில் மது வாங்கி குடித்து குப்புசாமி, விவேக் ஆகியோர் உயிரிழந்தது தொடர்பாக விசாரணை நடத்தினர்.