நெல்லை: நெல்லை வ.உ.சி. மைதான மேற்கூரை இடிந்து விழுந்தது தொடர்பாக ஒப்பந்ததாரருக்கு மாநகராட்சி நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. 7 நாட்களுக்குள் முதன்மை அறிக்கை அளிக்க வேண்டும் என ஒப்பந்ததாரருக்கு நெல்லை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மீண்டும் புனரமைப்பதற்கான மொத்த செலவையும் ஒப்பந்ததாரர் ஏற்க வேண்டும் எனவும் மாநகராட்சி நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.