கமுதி, மே 3: கமுதி அருகே, கருங்குளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அய்யனார் இப்பகுதியில் இருந்து பேருந்து நிலையம் நோக்கி செல்லும் சாலையில் டூவீலரில் சென்றுள்ளார். அப்போது சாலையோரத்தில் இருந்த பாம்பு ஒன்று இவரது டூவீலரின் இடுக்கான பகுதிகளுக்குள் சென்றுள்ளது. அதனை கண்ட அய்யனார் உடனே டூவீலரை நிறுத்தி விட்டு, தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
தீயணைப்பு நிலைய அலுவலர்கள் சந்திரசேகரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் உடனடியாக வந்து டூவீலரின் பாகங்களை ஒன்றொன்றாக பிரித்து, உள்ளே இருந்த 3 அடிநீள கொம்பேறி மூக்கன் பாம்பை பிடித்தனர். பின்னர் அதனை அடர்ந்த வனப் பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.