சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை: ஏப்ரல் 14ம் தேதி அம்பேத்கர் பிறந்த நாளில் நடைபெற உள்ள ‘சனநாயகம் காப்போம்’ சிறுத்தைகள் அணிவகுப்பிற்கு சமூக ஊடகங்களில் வெளியிடுவதற்கு பரப்புரை காணொலிகளை தயாரித்திட அழைப்பு விடுக்கப்படுகிறது. பெரும்பான்மைவாத மதவெறி, சிறுபான்மை இன வெறுப்பு, பணமதிப்பு வீழ்ச்சி, அதானியின் பங்குச்சந்தை கூட்டுக் கொள்ளை, அரசமைப்புச் சட்ட விரோத ஃபாசிச போக்கு, விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, சனாதன- கார்ப்பரேட் மேலாதிக்கம் உள்ளிட்ட கருப்பொருட்களில் பரப்புரை காணொலிகளை தயாரிக்க வேண்டும்.
குறிப்பிட்ட சமூகத்தையோ அல்லது தனி நபர்களையோ அவமதிக்கும் வகையில் காட்சிகளோ உரையாடல்களோ காணொலி படைப்பில் இடம் பெறக்கூடாது. யூட்யூபில் பதிவேற்றம் செய்யப்பட்ட பின்னர் அதன் இணைப்பை 9941722255, 9941822255 ஆகிய வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்பவும், அல்லது vckofficials@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரயிலும் அனுப்பலாம். ஏப்ரல் 11ம் தேதிக்குள் காணொளிகளை யூ- ட்யூபில் பதிவேற்றம் செய்ய வேண்டும். தேர்வு செய்யப்படும் முதல் மூன்று பரப்புரை காணொளிகளுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும். முதல் பரிசு ரூ.10000, 2வது பரிசு ரூ.7000, 3வது பரிசு ரூ.3000 வழங்கப்படும்.