Wednesday, May 15, 2024
Home » கடலில் மூழ்கி 3 மாணவர்கள் பலி

கடலில் மூழ்கி 3 மாணவர்கள் பலி

by Neethimaan

நெல்லை: நெல்லை மாவட்டம், திசையன்விளை அடுத்த உவரி அருகே நவ்வலடியை சேர்ந்தவர்கள் முகேஷ் (13), ராகுல் (14), ஆகாஷ் (14). அங்குள்ள பள்ளியில் 8 மற்றும் 9ம் வகுப்பு படித்து வந்தனர். விடுமுறை தினமான நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் 3 பேரும், அதே ஊரை சேர்ந்த பிரகாஷ் ஆகியோர் கடலில் குளிக்கச் சென்றனர். பிரகாஷ் மட்டும் கடற்கரையில் நின்றுள்ளார். மற்ற 3 பேரும் கடலில் இறங்கி குளித்தனர். அப்போது நீரில் மூழ்கி மூவரும் இறந்தனர்.

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர்களுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

four × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi