சென்னை: தமிழகம் முழுவதும் 38 டிஎஸ்பிகளுக்கு கூடுதல் எஸ்பிகளாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு உள்துறை செயலாளர் அமுதா பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழக காவல்துறையில் ஒவ்வொரு ஆண்டும் சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் ஏடிஜிபிகள் முதல் கூடுதல் எஸ்பிக்கள் வரை பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதில் கூடுதல் எஸ்பிக்களின் காலியிடங்களை வைத்து, டிஎஸ்பிகளுக்கு பதவி உயர்வுக்கான பட்டியல் தயாரிக்கப்பட்டது. அந்த பட்டியலில் உள்ள 38 டிஎஸ்பிகளுக்கு கூடுதல் எஸ்பிகளாக பதவி உயர்வு வழங்கி உள்துறைச் செயலாளர் அமுதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.