Tuesday, May 14, 2024
Home » இங்கிலாந்துடன் 2வது டெஸ்ட் இங்கிலாந்துடன் 2வது டெஸ்ட்: சர்பராஸ், சவுரப், வாஷிங்டனுக்கு வாய்ப்பு

இங்கிலாந்துடன் 2வது டெஸ்ட் இங்கிலாந்துடன் 2வது டெஸ்ட்: சர்பராஸ், சவுரப், வாஷிங்டனுக்கு வாய்ப்பு

by Dhanush Kumar

புதுடெல்லி: இங்கிலாந்து அணியுடன் நடக்க உள்ள 2வது டெஸ்ட் போட்டியில் இருந்து கே.எல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா இருவரும் காயம் காரணமாக விலகியதை அடுத்து, அவர்களுக்கு பதிலாக சர்பராஸ் கான், சவுரப் குமார், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தியா – இங்கிலாந்து அணிகளிடையே மொத்தம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. ஐதராபாத்தில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 28 ரன் வித்தியாசத்தில் போராடி வென்று 1-0 என முன்னிலை வகிக்க, 2வது டெஸ்ட் விசாகப்பட்டனத்தில் பிப்.2ம் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில், முன்னணி வீரர்கள் கே.எல்.ராகுல், ஜடேஜா இருவரும் காயம் காரணமாக இந்த போட்டியில் இருந்து விலகியுள்ளனர்.

முதல் டெஸ்டில் விளையாடியபோது ஜடேஜாவுக்கு தசைநாரிலும், ராகுலுக்கு தொடை பகுதியிலும் காயம் ஏற்பட்டது. இருவரும் சில நாட்கள் ஓய்வெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதால், 2வது டெஸ்டில் அவர்களுக்கு பதிலாக பேட்ஸ்மேன் சர்பராஸ் கான் (26 வயது), ஆல்-ரவுண்டர்கள் சவுரப் குமார் (30 வயது), வாஷிங்டன் சுந்தர் (24 வயது) ஆகியோர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் வாஷிங்டன் 4 டெஸ்ட் போட்டியில் விளையாடிய அனுபவம் உள்ளவர். மற்ற இருவரும் சர்வதேச கிரிக்கெட்டில் இன்னும் அறிமுகம் ஆகாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே கோஹ்லி சொந்த காரணங்களுக்காக முதல் 2 டெஸ்டில் இருந்து விலகியுள்ள நிலையில், தற்போது ராகுல், ஜடேஜாவும் இல்லாதது இந்திய அணிக்கு மேலும் பின்னடைவை கொடுத்துள்ளது.

* இந்தியா (2வது டெஸ்ட்): ரோகித் (கேப்டன்), கில், ஜெய்ஸ்வால், ஷ்ரேயாஸ், கே.எஸ்.பரத் (கீப்பர்), துருவ் ஜுரெல் (கீப்பர்), ஆர்.அஷ்வின், அக்சர், குல்தீப், சிராஜ், முகேஷ் குமார், பும்ரா (துணை கேப்டன்), ஆவேஷ் கான், ரஜத் பத்திதார், சர்பராஸ் கான், வாஷிங்டன் சுந்தர், சவுரப் குமார்.

You may also like

Leave a Comment

3 × four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi