ஊட்டி: நீலகிரி மாவட்டம் எமரால்டு அணை கரை பகுதியில் 2 புலிகள் உயிரிழந்தது. மரபணு குறைபாட்டால் பாதிக்கப்பட்டு அவலாஞ்சி வனப்பகுதியில் சுற்றித்திரிந்த வெள்ளை புலி உயிரிழந்தது. சம்பவ இடத்துக்கு நீலகிரி வன அலுவலர் தலைமையிலான குழுவினர் விரைந்துள்ளனர். சண்டை ஏற்பட்டு புலிகள் இறந்தனவா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பிரேத பரிசோதனைக்கு பின் தெரியவரும்.