ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் 2 பாகிஸ்தான் பயங்கரவாதிகளை ராணுவம் சுட்டுக்கொன்றது. ஜம்மு காஷ்மீர் பூஞ்ச் மாவட்டத்தில் பாலகோட் செக்டார் பகுதியில் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் உள்ளே புகுந்தனர். அவர்களை நோக்கி ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள்.
படுகாயம் அடைந்த அவர்கள் 2 பேர் எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி தப்பி ஓடினார்கள். அங்கு அவர்கள் செத்து மடிந்தனர். இதனால் எல்லை தாண்டிச் சென்று அவர்களின் உடல்களை மீட்க முடியவில்லை.இருப்பினும் துப்பாக்கிச் சண்டை நடந்த இடத்தில் இருந்து ஒரு ஏகே 47 ரக துப்பாக்கி, தோட்டாக்கள், இரண்டு கைக்குண்டுகள், பாகிஸ்தான் தயாரித்த சில மருந்துகள் கைப்பற்றப்பட்டன.