சங்ககிரி, நவ.4: சங்ககிரி பேரூராட்சி டிஸ்பென்சரி ரோடு, கோரிக்காடு, திருநகர் காலனி, ராமசாமி நகர், நாகிசெட்டிப்பட்டி ஆகிய பகுதிகளில் கலைஞர் மேம்பாடு திட்டத்தின் கீழ், ₹1.40 கோடி மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை பணி நடைபெற உள்ளது. மேலும், வார்டு 14ல் வசந்தம் காலனி, டிஸ்பென்சரி ரோடு வடக்கு தெருவில் மூலதன மான்ய நிதி திட்டத்தின் கீழ் ₹1.34 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் நடக்கின்றன. இப்பணிகளை பேரூராட்சி மன்ற தலைவர் மணிமொழி முருகன், சங்ககிரி ஒன்றிய குழு உறுப்பினர் தங்கமுத்து ஆகியோர் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற துணை தலைவர் அருண் பிரபு, செயல் அலுவலர் சுலைமான் சேட், பேரூர் திமுக செயலாளர் முருகன், கவுன்சிலர்கள் சந்திரா, கவிதா, கீதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.