திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த பெருமாள்பட்டு பகுதியை சேர்ந்தவர் பாபு(58). இவர் ரயில்வேயில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்றுமுன்தினம் மனைவியுடன் அம்பத்தூரில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கிருந்து நேற்று முன்தினம் இரவு தனது வீட்டுக்கு வந்த பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த செயின், மோதிரம், வளையல் உள்பட 10 சவரன் நகை, 2 கிலோ வெள்ளி, ரூ85 ஆயிரம் கொள்ளை போனது தெரியவந்தது. இதுகுறித்து பாபு கொடுத்த புகாரின்படி, செவ்வாய்பேட்டை இன்ஸ்பெக்டர் பாஸ்கர் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை நடத்துகின்றார்.