காரைக்குடி, மே 11: காரைக்குடி கலைவாணி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி சாய்தீபிகா 500 க்கு 495 மார்க் பெற்றுள்ளார். இவர் தமிழ் 98, ஆங்கிலம் 98, கணிதம் 100, அறிவியல் 100, சமூக அறிவியல் 99 பெற்றுள்ளார். பிரதீபா 500க்கு 494 பெற்றுள்ளார். தமிழ் 96, ஆங்கிலம் 99, கணிதம் 100, அறிவியல் 100, சமூக அறிவியல் 99 பெற்றுள்ளார்.சுபிக்ஷா 500க்கு 486 பெற்றுள்ளார். இவர் தமிழ் 91, ஆங்கிலம் 96, கணிதம் 100, அறிவியல் 100, சமூக அறிவியல் 99 பெற்றுள்ளார். கணிதத்தில் 5 பேர், அறிவியலில் 4 பேர், சமூக அறிவியலில் 2 மாணவர்கள் 100க்கு 100 பெற்றுள்ளனர். அனைத்து மாணவர்களும் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் என்.கண்ணன், நிர்வாக இயக்குநர் கண்ணம்மை கண்ணன் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் பாராட்டினர்.