இதனை தொடர்ந்து திருமருகல் அருகே பனங்குடி ஊராட்சியில் ₹10 லட்சம் மதிப்பில் வலை பின்னும் கூடம் கட்டும் பணி தொடங்கி வைக்கப்பட்டது. நாகப்பட்டினம் நகர்மன்ற தலைவர் மாரிமுத்து, துணைத்தலைவர் செந்தில்குமார், மீன்வளத்துறை இணை இயக்குநர் இளம்வழுதி, துணை இயக்குநர் ஜெயராஜ், செயற்பொறியாளர் (மீன்பிடி துறைமுகம் திட்ட கோட்டம் நாகப்பட்டினம்) ராஜ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.