போடி, மே 11: தேனி மாவட்டம், போடி கீழத்தெருவை சேர்ந்தவர் வேல்முருகன் மகன் ஹரிஹரன் (22). கோழிக்கடை உரிமையாளர். அதே பகுதியை சேர்ந்தவர் காமாட்சி. கடந்த 6ம் தேதி ஹரிஹரனின் கோழி கடை முன்பு காமாட்சி தனது டூவீலரை நிறுத்தியுள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் ஏற்பட்ட தகராறு முன்விரோதமாக மாறியுள்ளது. இந்நிலையில் நேற்று முன் தினம் காமாட்சி தனது மகன்கள் முருகன், ராமராஜ் ஆகியோருடன் சேர்ந்து ஹரிஹரனை தரக்குறைவாக பேசியதுடன், கைகளாலும், கம்புகளாலும் சராமரியாக தாக்கி கொலைமிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இதில் ஹரிஹரனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு போடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின் பேரில் காமாட்சி உள்ளிட்ட 3 பேர் மீது போடி நகர் காவல் நிலைய எஸ்ஐ இளங்கோ வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்.
வாலிபரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
previous post