வலங்கைமான், மார்ச்16: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 100% வாக்குப்பதிவு உறுதிப்படுத்தும் விதமாக வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளிவாசலில் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
நாடாளுமன்றத்திற்கான தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் 100% வாக்குப்பதிவு உறுதிப்படுத்தும் விதமாக பல்வேறு முன்னெடுப்பு பணிகளை தேர்தல் ஆணையம் செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாரு உத்தரவின் பேரில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி வாக்காளர் கையெழுத்து இயக்கம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதி,நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வலங்கைமான் பகுதியில் உள்ள பள்ளிவாசலில் வலங்கைமான் தாசில்தார் ரஷ்யா பேகம் வாக்காளர் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் தேர்தல் துணை தாசில்தார் ரவி, வருவாய் ஆய்வாளர் விக்னேஸ்வரன் கிராம நிர்வாக அலுவலர் வடிவேல், கிராம உதவியாளர் சரவணன் மற்றும் வருவாய்த் துறையினர் பலரும் உடன் இருந்தனர்.