Monday, May 13, 2024
Home » வயர் திருடிய 3 பேர் கைது

வயர் திருடிய 3 பேர் கைது

by Neethimaan

நாமகிரிப்பேட்டை, அக்.8: ராசிபுரம் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் அக்பர் மகன் ஹபி(42). இவர் காக்காவேரி அருகே புதியதாக கட்டிடம் கட்டி வருகிறார். இந்த கட்டிடத்திற்கு வயரிங் செய்ய வைத்திருந்த வயரை நேற்று காணவில்லை. இது அவர் அளித்த புகாரின்பேரில் நாமகிரிப்பேட்டை போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தினர். அருகில் இருந்து சி.சி.டி.வி., கேமராவில் உள்ள பதிவுகளை பார்த்து, சந்தேகத்தின் பேரில் காக்காவேரியில் இருந்து பட்டணம் செல்லும் சாலையில் வசிக்கும் ராமசாமி மகன் கருப்பண்ணன்(23) என்பவரிடம் விசாரணை நடத்தினர்.

இதில், மாதாக்கோவில் தெரு, காக்காவேரியை சேர்ந்த அமுல்ராஜ் மகன் அருளானந்தம்(19) மற்றும் ராசிபுரம் மாதாக்கோவில் தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் யேசுராஜ்(21) ஆகியோருடன் சேர்ந்து வயரை திருடியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, 3 பேரையும் போலீசார் கைது செய்து, வயரை பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment

18 + thirteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi