போடி, ஏப். 30: போடி நகர் பகுதியில் உள்ள 15 மற்றும் 23வது வார்டுகளில் இயங்கி வரும் ரேஷன் கடைகளில் தரமற்ற பொருட்கள் வழங்குவதாக புகார் வந்தன. நேற்று திமுக நகரச் செயலாளர் புருஷோத்தமன், நகர்மன்ற உறுப்பினர்கள் சங்கர், ராஜசேகர் உட்பட பலரும் கடைகளுக்கு சென்று ஆய்வு செய்தனர். மேலும், தரமான ரேஷன் பொருட்களை பொதுமக்களுக்கு வழங்க ஆலோசனை வழங்கினர். பொதுமக்களுக்கு சரியாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பண்டக சாலை செயலாளரிமும் கேட்டுக் கொண்டனர்.