மதுரை, ஏப். 13: மதுரை அண்ணாநகரில், ரூ.1.27 லட்சம் மதிப்பீட்டிலான ேபவர்பிளாக் சாலைக்கு பூமிபூஜை நடந்தது. மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அண்ணாநகரில் மல்லிகை குடியிருப்பு சாலை உள்ளது. இச்சாலையில் பேவர்பிளாக் கற்கள் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து வடக்கு தொகுதி எம்எல்ஏ கோ.தளபதி மேம்பாட்டு நிதியின் கீழ் இந்த பணிகளுக்காக ரூ.1.27லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த நிதியின் கீழ் மல்லிகை குடியிருப்பு சாலையில் பேவர்பிளாக் கற்கள் அமைப்பதற்கான பூமிபூஜை நேற்று நடந்தது. இதில் வடக்கு மண்டலத்தலைவர் சரவண புவனேஸ்வரி, மாநில தீர்மானக்குழு செயலாளர் அக்ரி கணேசன், கவுன்சிலர் மாலதி ராஜேஸ்கண்ணா உள்பட பலர் பங்கேற்றனர்.
ரூ.1.27 லட்சம் மதிப்பீட்டில் பேவர்பிளாக் சாலைக்கு பூமிபூஜை
previous post