நாமக்கல்: நாமக்கல் அருகே ராசிபுரம் அருகே பேளுக்குறிச்சி மாரியம்மன் கோயிலில் பட்டியலின மக்களை வழிபட அனுமதி மறுக்கப்பட்டது. 30 ஆண்டுகளாக ஒரு தரப்பினர் பட்டியலின மக்களை கோயிலுக்குள் சென்று வழிபட அனுமதி மறுப்பதாக புகார் அளிக்கப்பட்டது. எதிர்ப்பை மீறி கோயிலுக்குச் சென்ற பட்டியலின மக்களை ஒரு தரப்பினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.