மேட்டூர், மார்ச் 13: கர்நாடக மாநிலம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வெகுவாக குறைந்து போனது.
ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து தொடர்ந்து விநாடிக்கு 200 கனஅடியாக நீடிக்கிறது. இதேபோல், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 67 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 55 கனஅடியாக சரிந்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் 62.62 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று 62.49 அடியாக சரிந்துள்ளது. நீர் இருப்பு 26.57 டிஎம்சியாக உள்ளது.