மண்டபம், மார்ச் 21: ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகள். வெளி நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்கு அனைத்து வசதிகளும் இருந்தும் கூடுதலான மருத்துவர்கள் இல்லை. இதனால் போதிய மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களை நியமனம் செய்ய கோரி இந்திய கம்யூனிஸ்டு சார்பில் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு ராமேஸ்வரம் நகர் செயலாளர் சி.ஆர்.செந்தில்வேல் தலைமை வகித்தார்.