வேதராண்யம், ஏப்.6: புதிதாக ஆயிரம் உறுப்பினர்களை திமுகவில் சேர்க்கும் ஊராட்சிக்கு ரூபாய் 25 ஆயிரம் ரொக்க பரிசு ஒன்றியத்தின் சார்பில் அறிவிப்ப்பு நாகப்படடினம் மாவட்டம், வேதாரண்யம் தாலுகா மருதூர் வடக்கு ஊராட்சியில் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. முகாமை வேதாரண்யம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் உதயம் முருகையன் துவக்கி வைத்து மேற்கு ஒன்றியத்தில் அதிக உறுப்பினர் சேர்க்கை நடத்தும் கிளைக்கு முதல் பரிசாக ரூபாய் 25 ஆயிரமும், இராண்டாம் பரிசாக ரூபாய் 15 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூபாய் 10 ஆயிரமும் வழங்கப்படும் என்று அறிவித்தார்.
முகாமில் கலைஞர் நூற்றாண்டு மற்றும் கழக பவளவிழா ஆண்டை முன்னிட்டு வேதாரண்யம் மேற்கு ஒன்றியம், மருதூர் வடக்கு ஊராட்சி கிளைக் கழகங்களின் சார்பில் வழியான்செட்டிக்கட்டளை பகுதியில் மாவட்ட செயலாளரும், தமிழ்நாடு மீன்வளர்ச்சிக்கழக தலைவருமான கௌதமன் மற்றும் தொகுதி மேற்வையாளர் ஜெகவீரபாண்டியன் ஆகியோரின் வழிகாட்டுதலோடு, உறுப்பினர் சேர்க்கை துவங்கப்பட்டது. அதன்படி, 1000க்கு மேற்பட்ட உறுப்பினர்களை எந்த ஊராட்சிக்கழகம் சேர்க்கை நடத்துகிறதோ, அந்த ஊராட்சி கழகத்திற்கு முதல் இடத்தில் வரும் ஊராட்சிக்கு ரூ.25,000, அடுத்தடுத்து சேர்க்கை நடத்தும் ஊராட்சிக்கு தலா ரூ.15,000, ரூ.10,000 என மொத்தம் 50,000 ஊக்கத்தொகையாக ஒன்றியக்கழக செயலாளர் உதயம் முருகையன் அறிவித்தார். தொடர்ந்து கிளைக்கழக செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள் ஆதரவோடு உறுப்பினர் சேர்க்கை துவங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.