உடுமலை, மார்ச் 14: உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையின் மூலம் பிஏபி பாசன திட்டத்தில் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் மொத்தம் 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறுகின்றன. நான்கு மண்டலங்களாக பிரித்து தண்ணீர் வழங்கப்படுகிறது. முதலாம் மண்டல பாசனத்துக்கு கடந்த பிப்ரவரி 12ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில், முதல் சுற்று தண்ணீர் திறப்பு நிறைவடைந்தது. அடுத்த சுற்று தண்ணீர் திறப்பு குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.