கோவை, மே 11: கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல் துறை 2024-2025 கல்வியாண்டில் எம்.எஸ்சி. செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) என்ற புதிய பாடத்தை துவங்கியுள்ளது. இந்த எம்.எஸ்சி. செயற்கை நுண்ணறிவு 2 ஆண்டு படிப்பு. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இதற்கான விண்ணப்பங்கள் பல்கலைக்கழகத்தின் www.b-u.ac.in என்ற இணையதளத்தில் உள்ளது. விண்ணப்ப கட்டணம் இதர பிரிவினருக்கு ரூ.400, எஸ்.சி.,எஸ்.டி. பிரிவினருக்கு ரூ.200 ஆகும். இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். மேலும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை வரும் ஜூன் 6-ம் தேதிக்குள் தபால், கூரியர் மூலம் HOD, Department of computer science, Bharathiar University, Coimbatore என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரதியார் பல்கலையில் எம்.எஸ்சி. செயற்கை நுண்ணறிவு புதிய பாடம் துவக்கம்
previous post