திருவாடானை, மே 12: திருவாடானை அருகே திருவெற்றியூரில் பிரசித்தி பெற்ற பாகம்பிரியாள் அம்மன் திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்தும் வகையில் 9 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த உண்டியல்கள் 3 மாதங்களுக்கு ஒரு முறை திறந்து எண்ணப்படும். வழக்கம்போல் இந்த 9 உண்டியல்களும் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை உதவி ஆணையர் ஞானசேகரன் முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டது. இதில் ரொக்கமாக 24 லட்சத்து 71 ஆயிரத்து 121 ரூபாயும், தங்கம் 180 கிராமம், வெள்ளி 810 கிராமம் உண்டியல் வசூலாக கிடைத்துள்ளது.
தங்கம், வெள்ளி ஆகியவற்றையும் சேர்த்து மொத்தம் 34 லட்சம் உண்டியல் வருமானமாக கிடைத்துள்ளது என கணக்கிடப்பட்டுள்ளது. இப்பணியில் தேவஸ்தான மேலாளர் இளங்கோ, சரக கண்காணிப்பாளர் செந்தில்குமார், ஆய்வாளர் சண்முகம், ஆலய கவுரவ கண்காணிப்பாளர் சுந்தரராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.