தேன்கனிக்கோட்டை, மார்ச் 11: தேன்கனிக்கோட்டை அருகே, சித்தலிங்கன் கொட்டாய் கிராமத்தில் 83 பழங்குடி மக்களுக்கு சோலார் விளக்கு வழங்கப்பட்டது. தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பெட்டமுகிலாளம் மலை கிராரம், சித்தலிங்கன் கொட்டாய் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், 83 பழங்குடி மக்களுக்கு சோலார் விளக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், கற்பக விருட்சம் அறக்கட்டளை சத்தியநாராயணன், சத்தியசீலன், நன்கொடையாளர் சுதர்சன் சீனிவாசன், சித்தலிங்கன் கொட்டாய் தலைமை ஆசிரியர் அழகம்மாள், தன்னார்வலர் சிவாஜி மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.