தில்லைநகர், மார்ச் 20: திருச்சி உறையூர் நாச்சியார்கோவில் மேலத்தெரு பகுதியில் வசித்து வருபவர் காமராஜ் (44). இவர் கடந்த 6ம் தேதி இரவு 11 மணி அளவில் தனது வீட்டு வாசலில் தனது டூவீலரை நிறுத்திவிட்டு மறுநாள் எழுந்து பார்த்தபோது டூவீலரை காணவில்லை. இதுகுறித்து காமராஜ் உறையூர் போலீசில் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் உறையூர் போலீசார் வழக்கு பதிந்து காணாமல் போன வாகனத்தையும், திருடி சென்ற மர்ம நபர்களையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.