நாகர்கோவில், ஏப். 28: மார்த்தாண்டம் அருகே சூசைபுரம் புனித சூசையப்பர் மலங்கரை கத்தோலிக்க தேவாலய திருவிழா கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 5ம் நாள் திருவிழாவான 26ம் தேதி பக்த இயக்கங்களின் ஆண்டுவிழா, கலை விருந்து நடந்தது. நேற்று(27ம் தேதி) அன்பின் விருந்து, மறைக்கல்வி ஆண்டு விழா நடந்தது. இன்று 7ம் நாள் புதுநன்மை வழங்குதல் ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் தலைமையில் நடக்கிறது. 9வது நாள் திருவிழாவில் ஜெபமாலை பவனி, 10ம் நாள் திருவிழா நிறைவு ஆடம்பர திருப்பலி, அன்பின் விருந்து நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பங்கு தந்தை, பங்கு பேரவை மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.