சேலம், ஜன.14: சேலம் அம்மாபேட்டை தாதம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முருகன்(50), சமையல் வேலை செய்து வரும் இவர், கடந்த அக்டோபர் மாதம் அம்மாபேட்டை பகுதியில் உள்ள திருமணம் மண்டபம் அருகே டூவீலரில் சென்றார். அப்போது அவருக்கு மயக்கம் வந்தது. உடனடியாக வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு, வண்டியின் அருகில் படுத்தார். சுமார் 2 மணி நேரத்திற்கு பின் எழுந்து பார்த்த போது, அவரது டூவீலரை காணவில்லை.
அதனை மர்மநபர் திருடிச்சென்றது தெரிந்தது. இதுபற்றி அம்மாபேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து, போலீசார் விசாரித்தனர். அதில், டூவீலரை திருடிச் சென்றது அம்மாபேட்டை நஞ்சம்பட்டியைச் சேர்ந்த கனகராஜ்(30) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர்.