காவேரிப்பட்டணம், மார்ச் 12: காவேரிப்பட்டணம் அடுத்த மோட்டூரைச் சேர்ந்தவர் ரகுபதி(22). காவேரிப்பட்டணத்தை சேர்ந்தவர் காசி(23). காவேரிப்பட்டணத்தில் கடந்த 9ம் தேதி, அங்காளம்மன் கோயில் திருவிழா நடந்தது. அப்போது, இவர்கள் இருதரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில், 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இது குறித்து ரகுபதி அளித்த புகாரின் பேரில், காசி தரப்பை சேர்ந்த 3 பேரையும், காசி தரப்பை சேர்ந்த முத்து (29) என்பவர் அளித்த புகாரின் பேரில், ரகுபதி தரப்பை சேர்ந்த 2 பேரையும் காவேரிப்பட்டணம் போலீசார் கைது செய்தனர்.