கிருஷ்ணகிரி, மார்ச் 12: கிருஷ்ணகிரியில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 289 மனுக்கள் குவிந்தன. கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், நேற்று வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் சரயு தலைமையில் நடந்தது. கூட்டத்தில், பொதுமக்கள் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி, மின் இணைப்பு போன்ற பல்வேறு கோரிக்கைள் அடங்கிய 289 மனுக்களை அளித்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் சரயு, தகுதியான மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி, துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் ஆய்வாளர் சாதனைக்குறள், தனித்துணை கலெக்டர் பன்னீர்செல்வம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுந்தர்ராஜ் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.