கிருஷ்ணராயபுரம், மார்ச் 20: கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், திருக்காம்புலியூர் ஊராட்சி, செக்கணம் பகுதியை சேர்ந்தவர் ஆரியன் (46). விவசாய கூலி தொழிலாளி. இவர், வீடு கட்ட ரூ.3,50,000 பணம் வீட்டில் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் வேலைக்காக வெளியே சென்று விட்டு மீண்டும் வீட்டில் வந்து பார்த்தார். அப்போது வீட்டு கதவு உடைக்கப்பட்டு திறநது கிடந்தது. வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு வீடுகட்ட பீரோவில் வைத்திருந்த ரூ.3,50,000த்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து மாயனூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார், கைரேகை நிபுணர்களை வரவழைத்து கொள்ளையர்களின் தடயங்களை சேகரித்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.