வடமதுரை, நவ. 19: வடமதுரை அருகே சீலப்பாடியான்களத்தை சேர்ந்தவர் சின்னக்காளை (80). இவர் நேற்று முன்தினம் நான்கு வழிச்சாலையில் உள்ள ஒரு கடையில் டீ குடித்து விட்டு வீட்டிற்கு செல்ல சாலையோரம் நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே சென்ற கார் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு திண்டுக்கல் ஜிஹெச்சில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சின்னக்காளை நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து வடமதுரை போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.